பொலிஸ் மா அதிபராக பூஜித்த ஜெயசுந்தர நியமனம்

pooyiஇலங்கையின் 34வது பொலிஸ் மா அதிபராக பூஜித்த ஜெயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார்.

சற்று முன்னர் இதற்கான உத்தியோகபூர்வ கடிதத்தை ஜனாதிபதியிடம் இருந்து பூஜித்த ஜெயசுந்தர பெற்றுக் கொண்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபராக இருந்த என்.கே.இளங்கக்கோன் அண்மையில் ஓய்வு பெற்றதை அடுத்து, அந்தப் பதவிக்காக மூவரின் பெயர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிந்துரைத்திருந்தார்.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த எஸ்.எம்.விக்ரமசிங்க, பூஜித்த ஜெயசுந்தர மற்றும் சந்தன விக்ரமரத்ன ஆகியோரின் பெயர்களே இவ்வாறு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

அவர்களில் பூஜித்த ஜெயசுந்தரவை அரசியலமைப்புச் சபை தெரிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © 4179 Mukadu · All rights reserved · designed by Speed IT net