பஷில் கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை.

பாரிய நிதி மோசடி ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு மாத்தறை மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ கடுமையான நிபந்தனைகளுடன் சற்றுமுன்னர் நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
Besil-Rajapaksa-720x480
50 ஆயிரம் ரொக்கப் பிணையிலும் 16 இலட்ச மூன்று சரீரப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு வெளிநாட்டிற்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், தனது கடவுச் சீட்டை நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையும் காலை 9 மணி முதல் 12 மணிக்கு இடையில் நிதி குற்றப் பிரிவுக்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை பகுதியிலுள்ள காணி விவகாரம் ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வீரகேசரி

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net