சுவிஸ் குமார் எவ்வாறு தப்பினார் என்பது தொடர்பான விசாரணை அறிக்கை மன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை

viththija_26102015_2புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் சந்தேக நபரான சுவிஸ் குமார் என்று அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் எவ்வாறு கொழும்புக்கு தப்பி சென்றார் என்பது தொடர்பிலான விசாரணைகள் நடைபெற்று வருவதனால் , அது தொடர்பான விசாரணை அறிக்கையை அடுத்த வழக்கு தவணையின் போது மன்றில் சமர்ப்பிப்பதாக குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவு பொலிசார் தெரிவித்து உள்ளனர்

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் கருப்பையா ஜீவராணி முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன் போது மாணவி கொலை வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு உள்ள பன்னிரண்டு சந்தேக நபர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

கடந்த வழக்கு தவணையின் போது நீதிமன்றினால் கோரப்பட்ட அறிக்கைகள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதனால் அடுத்த தவணையில் அறிக்கைகளை சமர்ப்பிப்பதாக குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவு பொலிசார் நீதவானிடம் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து பன்னிரண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை பதில் நீதவான் கருப்பையா ஜீவராணி உத்தரவு இட்டார்.
குளோபல் தமிழ்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net