இலங்கையுடன் சிறந்த உறவுகளை பேணி வருவதாக நோர்வே பிரதமர் தெரிவிப்பு!

இலங்கையுடன் சிறந்த உறவுகளை பேணி வருவதாக நோர்வே பிரதமர் தெரிவிப்பு!

கடந்த 17 ஆண்டுகளாக இலங்கையுடன் சிறப்பான இருத்தரப்பு உறவுகளை பேணி வருவதாக நோர்வே பிரதமர் எர்னா சொல்பேர்க் தெரிவித்துள்ளார்.

ஒஸ்லோவில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனான கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு கருத்து வெளியிட்ட அவர்,

“இரு நாடுகளும் ஜனநாயக பெறுமதிகளை பறிமாறிக்கொண்டுள்ளன.

இரு நாடுகளும் சர்வதேச சட்டத்தையும் கூட்டான ஒத்துழைப்புகளையும் ஆதரிக்கின்றன. நோர்வேயும் இலங்கையும் உலகத்தின் எதிர்கால முக்கியத்துவத்திற்காக கடல் வழிகள் தொடர்பில் முக்கியதுவத்தை வழங்கி வருகின்றன.

கடல் வழி முகாமைத்துவம் தொடர்பிலான இலங்கையின் கோரிக்கைக்கு அமைய அதற்கான ஒத்துழைப்புகளை நோர்வே வழங்கி வருகிறது“ என தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net