இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பிரித்தானியாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தீவிர நடவடிக்கை.

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பிரித்தானியாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தீவிர நடவடிக்கை.

எதிர்வரும் 2019 மார்ச் மாதம் நடக்கவிருக்கிற ஐக்கிய நாடுகள் கூட்டத்தொடரில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (International Criminal Court) பரிந்துரை செய்யக்கோரியும், பிரித்தானிய பாராளுமன்றத்தில் இது தொடர்பாக விவாதம் ஒன்றை ஏற்பாடு செய்யக்கோரியும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களை தொடர்ச்சியாக சந்தித்து வருகின்றது.

அந்த வகையில் Carshalton and Wallington தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் Tom Brake MP அவர்களுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்களுக்கும் இடையில் நவம்பர் 30ம் திகதி சந்திப்பொன்று நடைபெற்றது.

நாடு கடந்த தமிழீழ அரசின் மனித உரிமைகள் அமைச்சர் பத்மநாபன் மணிவண்ணன் மற்றும் விளையாட்டு மற்றும் சமுக நலன் பேணும் பிரதியமைச்சர் சொக்கலிங்கம் யோகலிங்கத்தினுடைய நெறிப்படுத்தலில் நுஜிதன் இராசேந்திரம், பொன்ராசா புவலோஜன், டக்லஸ் மென்டிசன் அற்புதம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

குறித்த சந்திப்பில் யுத்த குற்றத்தில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் இலங்கை பிரதமராக பதவியேற்றமை தொடர்பாகவும், தற்போது ஏற்பட்பட்டுள்ள ஆட்சி மாற்றம் தொடர்பாகவும் கலந்துரையாடல் நடைபெற்றது அது மட்டுமல்லாமல் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு (international criminal court) பரிந்துரைப்பதற்கான மனுவொன்றும் கையளிக்கப்பட்டதுடன் இலங்கையின் நீதிப்பொறியமைவுகjளை கண்காணிக்கும் பொறுப்புடமைக்கான சர்வதேச நிபுணர் குழுவின் ( Sri Lanka Monitoring and Accountability Panel) அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த கடந்த வாரம் பிரித்தானியாவிற்கான இலங்கை தூதுவரை சந்தித்ததாகவும் தற்போது இலங்கையில் அரசியல் குழப்ப நிலை குறித்தும் முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராக ஆட்சி பீடமேரியது தொடர்பாக அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும் கூறினார்.

அது மட்டுமன்றி இதற்கு பதிலளித்த இலங்கை தூதுவர் பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் அமைப்புகளின் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகள் குறித்தும் ஒக்ட்டோபர் மாதம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஓக்ஸ்போர்ட் விஜயத்தின் போது நடைபெற்ற புலிக்கொடி சம்மந்தப்பட்ட பிரச்சினைகளையும் அது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டமை குறித்து கண்டனத்தை பதிவு செய்ததோடு பிரித்தானியாவிலுள்ள தமிழ் புலம்பெயர் அமைப்புக்களை தடை செய்யுமாறும் கோரியிருந்தார் எனவும் Tom Brake அவர்கள் கருத்து தெரிவித்ததோடு வருகின்ற ஜெனிவா கூட்டத்தொடரில் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் ஆதரவுடன் வருகின்ற 2019 மார்ச் கூடத்தொடரில் இலங்கைக்கு எதிராக பிரேரணை ஒன்றை முன்வைப்பதற்கான நகர்வுகள் நடைபெறுவதாகவும் கூறியதோடு இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான பிரேரணையில் கையொப்பம் இட்டமை குறிப்பிடத்தக்கது

Copyright © 5859 Mukadu · All rights reserved · designed by Speed IT net