நாளை காலை கட்சித்தலைவர்களின் கூட்டம்!

நாளை காலை கட்சித்தலைவர்களின் கூட்டம்!

நாளை (புதன்கிழமை) காலை கட்சித்தலைவர்களின் கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டம் நாளை காலை 9 மணியளவில் இடம்பெறவுள்ளது.

அத்துடன் நாடாளுமன்ற ஆசனங்கள் முன்பு ஒதுக்கப்பட்ட வகையில் நாளையும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்படும் என படைக்கள சேவிதர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பெரும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் நாடாளுமன்றம் நாளை காலை 10 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.

பிரதமர் பதவியை வகித்த மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நாளைய தினம் மீண்டும் இலத்திரனியல் வாக்கெடுப்புமூலம் உறுதிப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதனைத் தொடர்ந்து சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Copyright © 7473 Mukadu · All rights reserved · designed by Speed IT net