நாட்டுமக்களுக்கு விசேட உரையை அடுத்து மஹிந்த பதவி விலகுகின்றார்!

நாட்டுமக்களுக்கு விசேட உரையை அடுத்து மஹிந்த பதவி விலகுகின்றார்!

நாட்டு மக்களுக்காக நாளை விசேட உரையை ஆற்றிய பின்னர் மஹிந்த ராஜபக்ஷ தான் புதிதாக ஏற்றுக்கொண்ட பிரதமர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இராஜினாமாவை அடுத்து, ஜனாதிபதி சிறிசேனவுடன் பரந்த அரசியல் கூட்டணியை அரசாங்கத்தை அமைக்க அவர் ஆதரவு வழங்குவார் என்றும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டீ சில்வா மற்றும் ருவான் விஜயவர்தன ஆகியோர் தமது டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இது குறித்து தகவல்களை வெளியிடாத நிலையில், மைத்திரிபால சிறிசேன அந்த கடிதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net