72 மணித்தியாலங்களில் நாடு இயல்பு நிலைக்கு திரும்பும்!

72 மணித்தியாலங்களில் நாடு இயல்பு நிலைக்கு திரும்பும்!

அடுத்த 72 மணித்தியாலங்களுக்குள் நாடு இயல்பு நிலைக்கு திரும்பும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் தனது உத்தியோகப்பூர்வ முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள பதிவு ஒன்றிலேயே அவர் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நாட்டில் நாளுக்கு நாள் அரசியலில் பல முக்கிய திருப்பங்கள் இடம்பெற்று வரும் நிலையிலேயே அவர் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, இன்று அல்லது நாளை புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவிப்பிரமானம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net