மஹிந்தவை மீண்டும் ஜனாதிபதி கதிரையில் அமர வைப்போம்!

மஹிந்தவை மீண்டும் ஜனாதிபதி கதிரையில் அமர வைப்போம்!

மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக் கூடிய நிலையை ஏற்படுத்துவோம் என, நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

மஹிந்தவின் விஜேராம இல்லத்தில் வைத்து இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,

”மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜினாமா செய்தமை சிறந்த விடயம். அதை எண்ணி நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில், பெரும்பான்மைக்கு நாம் தலைவணங்க வேண்டும்.

இந்நிலையில், எதிர்க்கட்சியில் சிறப்பாக செயற்பட்டு, நாடளாவிய ரீதியில் சென்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி மஹிந்தவை மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக்குவதற்கு முடியும்.

யார் மஹிந்தவைவிட்டு விலகிச் சென்றாலும் நான் ஒருபோதும் விலகிச் செல்லப் போவதில்லை” என்றும் குறிப்பிட்டார்.

Copyright © 5586 Mukadu · All rights reserved · designed by Speed IT net