வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ணத்தை வென்றது இலங்கை!

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ணத்தை வென்றது இலங்கை!

கமிந்து மெண்டிஸ் அதிரடி காரணமாக வளர்ந்து வரும் இந்தியா கிரிக்கெட் அணியை, இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்று, 2018 ஆம் ஆண்டுக்கான வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களுக்கான ஆசியக் கிண்ணத்தை வென்றுள்ளது.

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று ஆரமபமான இப்போட்டியில் நாணய சுழற்சியின் வென்று முதலில் துடுப்பாடிய இலங்கை வளர்ந்து வரும் அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 270 ஓட்டங்களை பெற்றது.

அவ்வணி சார்பில் கமிந்து மெண்டிஸ் 1 சிக்ஸர் 4 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 61 ஓட்டங்களையும், எச் பயகொட 54 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் 271 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற அடிப்படையில் களமிறங்கிய இந்திய வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி 50 ஓவர்கள் நிறைவில் 267 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது. இதனால் இலங்கை வளர்ந்து வரும் அணி 3 ஓட்டங்களால் வெற்றிவாகை சூடியது.

அவ்வணி சார்பில் ஷம்ஸ் முலானி 46 ஓட்டங்களை, நிதீஷ் ராணா 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். குறித்த போட்டியின் ஆட்டநாயகனாகவும், தொடர் நாயகனாகவும் கமிந்து மெண்டிஸ் தேர்வு செய்யப்பட்டார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net