யானை தாக்கியதில் ஒருவர் பலி!

யானை தாக்கியதில் ஒருவர் பலி!

மஹவிலச்சி பகுதியில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பண்ணையில் வேலை செய்து கொண்டிருக்கும் போதே குறித்த நபர் யானை தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட உயிரிழந்துள்ளார்.

மஹவிலச்சி பகுதியை சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மஹவிலச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Copyright © 8609 Mukadu · All rights reserved · designed by Speed IT net