அரசியலமைப்பை பாதுகாக்கும் போராட்டத்தில் வெற்றி!

அரசியலமைப்பை பாதுகாக்கும் போராட்டத்தில் வெற்றி!

நாட்டின் அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக செயற்பட்டதாகவும், அதனை இன்று வெற்றிகொண்டுள்ளதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற பின்னர், அலரி மாளிகையில் விசேட நிகழ்வொன்று இடம்பெற்றது.

இதன்போது செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவித்த ரிஷாட் பதியுதீன் மேற்குறித்தவாறு குறிப்பிட்டார்.

நாட்டில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற செயற்பாடு அரசியலமைப்புக்கு முரணானது என்ற காரணத்தினாலேயே அதற்கெதிராக இறுக்கமான செயற்பாட்டை முன்னெடுத்ததாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, புதிய பிரதமருக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net