அரசியல் இலாபத்திற்காக ரணில் செயற்படுகின்றார்!

அரசியல் இலாபத்திற்காக ரணில் செயற்படுகின்றார்!

அரசியல் இலாபத்திற்காகவே பிரதமர் ரணில் விக்ரமசிங்க செயற்பட்டு வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராகப் பதவியேற்றுள்ள நிலையில், கொழும்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக தேசிய அரசாங்கம் என்ற போர்வையில் அரசமைப்பில் உள்ள பலவீனங்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனக்குச் சாதகமாக ஏற்படுத்த முனைகின்றார்.

நாடாளுமன்றத்தில் அதிக ஆசனங்களைக் கொண்ட கட்சி வேறு எந்த கட்சியுடனும் இணைந்து தேசிய அரசாங்கத்தினை அமைக்கலாம் என்பதை பிரதமர் ரணில் வெளிக்காட்ட முயல்கின்றார்.

தனது அரசியல் இலாபத்திற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு செயற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இதனை மக்கள் விடுதலை முன்னணியினர் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்” என அனுரகுமார திசநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net