3 பிள்ளைகளின் தந்தை ரயில் முன் பாய்ந்து தற்கொலை!

3 பிள்ளைகளின் தந்தை ரயில் முன் பாய்ந்து தற்கொலை!

பதுளையிலிருந்து தலவாக்கலை நோக்கிச் சென்ற ரயிலின் முன் பாய்ந்து மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் டயகம பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான கோவிந்தசாமி உதயசந்திரன் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவிக்கையில்,

சடலமானது நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் குறித்த தற்கொலை தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்த்க்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net