மட்டக்களப்பில் காணாமல்போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு.

மட்டக்களப்பில் காணாமல்போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு.

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களுதாவளை பகுதியிலுள்ள நீர்நிலையில் இருந்து ஆணொருவரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.

50 வயதுடைய தேற்றாத்தீவு வைத்தியர் வீதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ஸ்கந்தராஜா என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் மூன்று நாட்களுக்கு முன் காணாமல்போன நிலையில் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மரண விசாரணைகள் இன்று காலை நடைபெற்றதை தொடர்ந்து பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net