சீயோன் தேவாலய தாக்குதலை காரணம் காட்டி பண மோசடி!

சீயோன் தேவாலய தாக்குதலை காரணம் காட்டி பண மோசடி!

மட்டக்களப்பு, சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை காரணம் காட்டி பணம் உள்ளிட்ட உதவிகளை கோரி வருவதாக தேவாலயத்தின் பிரதம போதகர் ரொசான் மகேசன் குற்றம் சுமத்தியுள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே போதகர் ரொசான் மகேசன் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“தேவாலய குண்டு வெடிப்புச் சம்பவம் குறித்து சிலர் பிழையான கருத்துகளை எழுதி வருகின்றனர். அதனை அவர்கள் உடனடியாக மாற்றிக்கொள்ளவேண்டும்.

இதேவேளை குண்டுத்தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களில் பலர், இன்னும் மன நிலை பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். ஆகையால் அவர்களை பழைய நிலைமைக்கு மீட்டெடுக்க வேண்டிய தேவையுள்ளது.

அந்தவகையில் எதற்காக எமது தேவாலயம் இலக்குவைக்கப்பட்டது என்பது தெரியாதபோதிலும் தாக்குதல் மேற்கொண்டவர்களை நாங்கள் மன்னிக்கின்றோம்” என போதகர் ரொசான் மகேசன் தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net