ஜப்பானில் கத்திக் குத்து; மூவர் பலி!

ஜப்பானில் கத்திக் குத்து; மூவர் பலி!

ஜப்பானில் இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததோடு, 16 பேர் காயமடைந்துள்ளனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று (28) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு கத்திக் குத்தில் உயிரிழந்தவர்களில் 12 வயதான பாடசாலை மாணவியொருவரும், 39 வயதான ஒருவரும் அடங்குகின்றனர்.

இதேவேளை, இந்தக் கத்திக் குத்தை நடத்தியதாகக் கூறப்படும் 50 வயதுடைய நபரும் தன்னைத்தானே கத்தியால் குத்தி உயிரிழந்துள்ளார்.

பஸ்ஸிற்காக காத்திருந்த மாணவர்கள் மீதே கத்திக் குத்து நடத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்தச் சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை எனவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net