இராணுவ சீருடை, வாள்களுடன் ஒருவர் கைது!

இராணுவ சீருடை, வாள்களுடன் ஒருவர் கைது!

மொறட்டு – கல்கிஸ்ஸ பகுதியில் குண்டுத்தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுடன் இணைந்து செயற்பட்டுள்ளார் எனும் சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொறட்டுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சொய்சாபுர – குடியிருப்பு தொகுதியில் நேற்று பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதணை நடவடிக்கையின் போதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சொய்சாபுர பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய முகமது நிசார் ஹகமட் இம்ரான் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவரிடமிருந்து இராணுவத்தினரின் சீருடைகளும், வாள்கள் , தொலைப்பேசி, ட்ரோன் கெமரா, மடிக்கணணி உட்பட மேலும் பல கமராக்களும் மீட்கப்பட்டுள்ளன.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net