மட்டக்களப்பில் பல்கலைகழக திட்டம் இடைநிறுத்தம்!
மட்டக்களப்பு, ஓட்டமாவடியில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி தனியார் பல்கலைகழகம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக காணி வைத்திருந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த திட்டம் அரசாங்க அதிபரால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அவ்விடத்தில் இடம்பெயர்ந்தோரை மீள்குடியேற்றுவத்திற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதின் காரணமாக காணியை கொடுப்பதில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளதென அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அவ்விடத்தில் தொழிநுட்ப கல்லூரியை அமைத்து அனைவருக்கு தொழிற்பயிற்சி வழங்க திட்டமிட்டிருந்ததாக அமீர் அலி தெரிவித்துள்ளார்.