கிளிநொச்சி இந்திராபுரம் மக்களின் வீடுகள் காற்றினால் சேதம்!

கிளிநொச்சி இந்திராபுரம் மக்களின் வீடுகள் காற்றினால் சேதம் – மழை காரணமாக பொருட்களும் சேதம்.

கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முகமாலை இந்திராபுரம் பகுதியில் 19 வருடங்களின் பின் மீள்குடியேரி உள்ளனர்.

இவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு ஒருமாதகாலமாக பனை ஓலைகளால் மேய்ந்து வீடுகளில் வசித்து வருகின்றனர்.

இவ்வாறு இருக்கும் சந்தர்ப்பத்தில் நேற்று நள்ளிரவு காற்றுடன் கூடிய மழை பெய்ததால் வீட்டுக்கூரைகள் பிடுங்கி எறியப்பட்டுள்ளதுடன் அவர்களின் உடைமைகளும் மழையினால் சேதம் அடைந்து வீட்டாதகவும் மக்கள் கூறுகின்றனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net