மோடி இலங்கை வந்தடைந்தார்!

மோடி இலங்கை வந்தடைந்தார்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சற்று முன்னர் கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

போயிங் 737 என்ற விமானத்தினூடாக இன்று காலை 11.00 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இந்தியப் பிரதமர் உட்பட 59 பேர் அடங்கிய தூதுக்குழுவினர் வந்தடைந்தார்.

அத்துடன் அவரது பாதுகாப்பு கருதி இந்தியாவிலிருந்து மற்றுமோர் விமானமும் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

இதன் பின்னர் 11.15 மணியளவிலிலிருந்து விமானத்தை விட்டு தரையிறங்கிய இந்தியப் பிரதமர் மோடிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர்கள் வரவேற்ப்பளித்ததுடன் இந் நிகழ்வில் ஏனைய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

அத்துடன் மோடிக்கான உத்தியோகபூர்வ வரவேற்ப்பு நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Copyright © 3817 Mukadu · All rights reserved · designed by Speed IT net