ஜம்மு- காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: இரு பயங்கரவாதிகள் பலி

ஜம்மு- காஷ்மீர், சோபியான் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் இருவரை படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.

சோபியான் மாவட்டதில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை திடீர் தேடுதல் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், படையினரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையில் நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

அதில் இரண்டு பயங்கரவாதிகளை படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.

இந்நிலையில் தப்பிச் சென்ற ஏனைய பயங்கரவாதிகளை தேடும் பணியில் படையினர் ஈடுபட்டுள்ளதாக இந்திய இராணுவம் அறிவித்துள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net