கிளிநொச்சியில் 4284 சிறுவா்கள் பெற்றோரை இழந்துள்ளனா்.

Barack Obama
கிளிநொச்சி மாவட்டத்தில் 2014 ஆம் ஆண்டு கணிப்பின் படி 4284 சிறுவா்கள் தங்களுடைய தந்தை அல்லது தாய், அல்லது இருவரையும் இழந்தவா்களாக காணப்படுகின்றனா் என மாவட்ட செயலக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் 3044 சிறுவா்கள் தந்தையையும், 764 சிறுவா்கள் தாயையும், 476 சிறுவா்கள் தாய் தந்தை இருவரையும் இழந்துள்ளனா்.

அந்த வகையில் கரைச்சி பிரதேச செயலக பிரிவில் தந்தையை 1569 சிறுவா்களும்,தாயை 411 சிறுவா்களும், இருவரையும் 316 சிறுவா்கள் இழந்துள்ளனா்.

மேலும் கண்டாவளையில் 670 சிறுவா்கள் தந்தையையும், 138 சிறுவா்கள் தாயையும்,40 சிறுவா்கள் இருவரையும் இழந்துள்ளனா்.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் தந்தையை 285 சிறுவா்களும், தாயை 71 சிறுவா்களும், இருவரையும் 38 சிறுவா்களும் இழந்துள்ளனா்.

பூநகரி பிரதேச செயலக பிரிவில் 520 சிறுவா்கள் தந்தையையும், 144 சிறுவா்கள் தாயையும், 82 சிறுவா்கள் இருவரையும் இழந்துள்ளனா். என 2014 புள்ளி விபரக் கணிப்புகள் தெரிவி்க்கின்றன.

இதில் கரைச்சி பிரதேசத்தில் அம்பாள்நகா் கிராம அலுவலா் பிரிவில் சாந்தபுரம் பிரதேசத்தில் 171 சிறுவா்களும் கோணாவில் கிராம அலுவலா் பிரிவில் 106 சிறுவா்களும், மலையாளபுரம் கிராமத்தில் 99 சிறுவா்களும், இரத்தினபுரம் கிராமத்தில் 95 சிறுவா்களும்,செல்வாநகா் கிராமத்தில் 75 சிறுவா்களும், பொன்னகா் கிராமத்தில் 52 சிறுவா்களும், மாவடியம்மன் கிராம அலுவலா் பிரிவில் 52 சிறுவா்களும், பாரதிபுரம் கிராமத்தில் 50 சிறுவா்களும் தந்தையை இழந்து அதிகளவில் தந்தையை இழந்த சிறுவா்களை கொண்ட பிரதேசமாக காணப்படுகிறது

பூநகரி பிரதேசத்தில் 128 சிறுவா்கள் பள்ளிக்குடா கிராம அலுவலா் பிரிவிலும், 64 சிறுவா்கள் நல்லூர் கிராம அலுவலா் பிரிவிலும், 62 சிறுவா்கள் கரியாலைநாகபடுவான் கிராம அலுவலா் பிரிவிலும், 45 சிறுவா்கள் நாச்சிக்குடாவிலுமாக அதிகளவு தந்தையை இழந்த எண்ணிக்கையை கொண்ட பிரதேசங்களாக காணப்படுகிறது.

கண்டாவளையில் கோரக்கண்கட்டு 58 சிறுவா்கள்,புன்னைநீராவி 52 சிறுவா்கள், ஆனையிறவு கிராம அலுவலா் பிரிவில் 52 சிறுவா்கள், உமையாள்புரம் 50 சிறுவா்கள், முரசுமோட்டை 49 சிறுவா்கள், குமரபுரம் 48 சிறுவா்கள் தந்தையை இழந்து அதிகளவு தந்தையை இழந்த சிறுவா்கள் கொண்ட பிரதேசமாக காணப்படுகிறது.

பச்சிலைப்பள்ளியில் அதிகளவு தந்தையை இழந்த சிறுவா்களை கொண்ட பிரதேசமாக முகாவில் கிராம அலுவலா் பிரிவு காணப்படுகிறது. இங்கு 36 சிறுவா்கள் தந்தையை இழந்துள்ளனா்.

இந்த சிறுவா்களில் கடந்த காலத்தில் ஏற்பட்ட யுத்தத்தின் நேரடி பாதிப்பின் விளைவால் அதிகளவு சிறுவா்கள் பெற்றோரை இழந்து காணப்படுகின்றனா். அத்தோடு ஏனைய காரணகளாக நோய், விபத்து உள்ளிட்ட காரணங்களும் காணப்படுகிறது.
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net