வடகொரிய ஆளுங் கட்சி கூட்ட பூர்த்தியையொட்டி மெழுகுவர்த்திகளை ஏந்தி நடனமாடிய மக்கள்.

வட கொரிய ஆளுங் கட்­சியின் 4 நாள் கூட்டம் பூர்த்­தி­யா­னதைக் கொண்­டாடும் வகையில் செவ்­வாய்க்­கி­ழமை இரவு அந்­நாட்டின் தலை­ந­க­ரி­லுள்ள கிம் இல் – சங் சதுக்­கத்தில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்கள் மெழு­கு­வர்த்­தி­களை ஏந்தி நட­ன­மா­டினர்.

அந்­நாட்டின் தலைவர் கிம் யொங் – உன் கூடி­யி­ருந்த கூட்­டத்தின் முன்­பாகத் தோன்றி கையை அசைக்­கவும் மக்கள் மகிழ்ச்சி ஆர­வாரம் செய்­தனர்.
3405060100000578-3583507-image-a-82_1462913640914

இதன்­போது ‘கொரிய தொழி­லாளர் கட்­சியின் 7 ஆவது கூட் டம் நீடூழி வாழ்க’ என பொருள்­ படும் வாச­கத்தைக் கொண்ட இராட்­சத கொடி காட்­சிப்ப­டுத்தப்பட்­டது. அத்­துடன் அந்­நாட்டில் 1980 ஆம் ஆண்­டுக்குப் பின் முதல் தடவை­யாக இடம்­பெற்ற மேற்­படி ஆளுங் கட்சிக் கூட்ட பூர்த்திக் கொண்­டாட்­டங்­களின் அங்­க­மாக நடன நிகழ்­வு­க ளும் களி­யாட்ட நிகழ்­வு­களும் இடம்­பெற்­றன.

340503A100000578-3583507-image-a-76_1462913570035
அந்தக் கட்­சியின் 3,400 க்கு மேற்­பட்ட பிர­தி­நி­திகள் கிம் யொங் – உன்­னி­னது அணு­சக்தி மற்றும் பொரு­ளா­தாரக் கொள்­கை­க­ளுக்கு ஆத­ர­வ­ளித்து வாக்­க­ளித் துள்­ளனர். அத்­துடன் அந்தக் கட்­சியின் தலைவர் என்ற பத­வியும் அவ­ருக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.

கிம் யொங் – உன் இது­வரை காலமும் முதலாவது செயலாளர் என்ற பதவி நிலை யிலேயே கொரிய தொழிலாளர் கட்சிக்கு தலைமை தாங்கி வந்திருந்தார்.
34031E5000000578-3583507-image-a-91_1462914253510

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net