“அதிகாரத்திற்கு எதிரான குரலோடு” முகடு ..அசோக் யோகன் கண்ணமுத்து

முகடு சஞ்சிகை தனது இரண்டாவது ஆண்டு நிறைவும் பன்னிரெண்டாவது சிறப்பு இதழ் வெளியீடும் மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது,அவ் நிகழ்வில் உரையாற்றிய பங்குபற்றிய சமூக போராளி அசோக் யோகன் கண்ணமுத்து முகடு குறிந்து தனது சமூகத்தளத்தில் கூறி இருப்பதாவது .
13900405_10201862823370131_562272860_n
Ashok-yogan Kannamuthu

எமது போராட்டமும் , அதன் திசைவழியும் “அதிகார ஒத்தோடி பிழைப்புவாத சமூகம்” ஒன்றை இலங்கையிலும் , புகலிட நாடுகளிலும் தோற்றுவித்துள்ள இன்றைய சூழலில், இளம் தலைமுறை ஒன்று, “அதிகாரத்திற்கு எதிரான குரலோடு” , செயலூக்கம் கொள்ளுதல் என்பது, ஆச்சரியம் தருவதும் , எம்மை சந்தோசம் கொள்ள வைப்பதுமாகும்.

நேற்று ,இந்த இளம் தலைமுறை நண்பர்களின் குரலாய் வெளிவரும், ‘முகடு’ அரசியல் -கலை இலக்கிய சஞ்சிகையின் இரண்டாம் ஆண்டு நிறைவும் ,சிறப்பிதழ் வெளியீடும் பாரிசில் நடைபெற்றது.
இச் சஞ்சிகையின் உள்ளடக்கம் தொடர்பாக, என்னிடம் விமர்சனங்கள் உண்டு .

இவ் விமர்சனங்களை, எதிர்வினைகளை ஆரோக்கியமாக உள்வாங்கவும், உரையாடவும் களம் அமைக்கும் இந் நண்பர்கள், சரியான திசைவழி நோக்கி தம் பயணத்தை தொடர்வார்கள் என்ற நம்பிக்கை, என்னிடம் எழுகின்றது.

‘முகடு’ சஞ்சிகைக்கும், இதன் நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்களும் – நன்றிகளும்….!

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net