துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த “கொண்ட தாரக ” பலி!

துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த “கொண்ட தாரக ” பலி!

அங்கொட சந்தியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவத்தில் காயமடைந்த 33 வயதுடைய “கொண்ட தாரக” என அழைக்கப்படும் தாரக இரோஷன பெரேரா என்ற பாதாள உலகக்குழுவின் உறுப்பினரே உயிரிழந்துள்ளார்.

பாதாள உலகக் குழுவின் தலைவரான சமயங் என்பவரின் சகா என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இரு ஆயுதமேந்திய இனந்தெரியாதோரே குறித்த நபர் மீது துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Copyright © 6763 Mukadu · All rights reserved · designed by Speed IT net