சிவப்பு எச்சரிக்கை !

சிவப்பு எச்சரிக்கை !

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் மண்சரிவு ஏற்படும் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை அணர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தால் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக நாட்டின் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. அத்தோடு சில இடங்களில் மண்சரிவும் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து காலி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு மண்சரிவின் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 1576 Mukadu · All rights reserved · designed by Speed IT net