கோடி நன்மைகள் தேடிவரும் குருப்பெயர்ச்சி!

கோடி நன்மைகள் தேடிவரும் குருப்பெயர்ச்சி!

நவகிரகங்களில் தேவகுருவாக திகழும் குருபகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி ஒக்டோபர் 4 ஆம் திகதி துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார்.

இந்த ஆண்டு வியாழக்கிழமை குருப்பெயர்ச்சி நிகழ்ந்துள்ளது சிறப்பான அம்சமாகும்.

இந்த குருப்பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு நன்மைகளையும், சில ராசிக்காரர்களுக்கு நன்மை கலந்த தீமையாகவும் அமைந்துள்ளது.

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களில் ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு அதிக நன்மைகள் நடைபெறும் காலமாகும்.

இனி 12 இராசிக்காரர்களுக்குமான பலன்களை பார்க்கலாம்…

மேஷம்

குடும்பம் குதூகலமாக அமையும், கணவன் மனைவி இடையே உற்சாகம் அதிகரிக்கும். பேசும் வார்த்தையில் இனிமை அதிகரிக்கும்.

சமூகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். புது வீடு கட்டி குடியேறுவீர்கள். வாகனம் வாங்கலாம். சுப காரியங்கள் அதிகம் நடைபெறும். வெளிநாடு செல்லும் யோகம் வரும். மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடு செல்லலாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி ஏற்றத்தை தரக்கூடியது. குடும்பத்தில் கணவன் மனைவி இடையே உற்சாகம் அதிகரிக்கும். திருமணம் கைகூடி வரும். காதல் வெற்றியடையும். செய்யும் தொழிலில் இலாபம் கிடைக்கும்.

மூத்த சகோதரரின் அன்பு அதிகரிக்கும். செல்வம் பெருகும். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.

மிதுனம்

குடும்பத்தில் உற்சாகம் கூடும். பணவரவு அதிகரிக்கும். அதே நேரத்தில் இந்த நேரத்தில் கடன் வாங்க வேண்டாம். மறைந்திருந்த நோய்கள் வெளிப்படும். நோய்களை குணப்படுத்த பணம் வரும்.

வெளிநாடு செல்லும் யோகம் வரும் சுப காரியங்கள் நிகழும். புதிய தொழில் தொடங்கலாம். பணியில் பதவி உயர்வுகள் கிடைக்கும். சிலருக்கு பதவியில் மாற்றம் வரும்.

கடகம்

குழந்தை பாக்கியம் கிட்டும். வெளியூர், வெளிநாடு பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் கூடிவரும், செய்யும் தொழிலில் இலாபம் அதிகரிக்கும். மூத்த சகோதரரின் உதவி கிடைக்கும்.

சிம்மம்

இந்த குருப்பெயர்ச்சி விஷேசமான பலன்களை உங்களுக்குத் தரும். சுப காரியங்களுக்காக செலவுகள் ஏற்படும்.

வெளிநாடு செல்வதற்கு முயற்சி செய்யலாம் வெற்றி கிடைக்கும். புதிய தொழில் தொடங்கலாம். பணி செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம் பணம் கிடைக்கும்.

கன்னி

திருமண யோகங்கள் கைக்கூடிவரும். காதல் கைக்கூடி திருமணத்தில் முடிய வாய்ப்பு உள்ளது. வெளிநாடு செல்லும் யோகம் வரும்.

செய்யும் தொழிலில் இலாபம் வரும். மூத்த சகோதரரின் மூலம் நன்மைகள் நடைபெறும்.

துலாம்

கடந்த ஓராண்டு காலமாக நீங்கள் பட்ட கடன்கள் தீரும். நோய்கள் தீரும். உங்கள் பேச்சிற்கு மதிப்பு அதிகரிக்கும்.

வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய பணிமாற்றம் கிடைக்கும். உற்சாகமான குருப்பெயர்ச்சி இதுவாகும்.

விருச்சிகம்

கூட்டுத் தொழில்கள் சிறப்படையும், பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் நன்மைகள் பல நடக்கும்.

கணவன், மனைவிக்குள் அன்பும் பாசமும் அதிகரிக்கும். அப்பாவின் மூலம் பண வருமானம் அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் யோகம் வரும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

தனுசு

இந்த ராசிக்காரர்கள் ஜென்ம சனியால் கவலைப்பட்டாலும் இனி குரு பெயர்ச்சியினால் புது வீடு கட்டலாம்.

சுப காரியங்களில் செலவுகள் ஏற்படும். நோய்கள் தீரும், கடன்கள் தீரும் காலம். மாணவர்கள் உயர்கல்விக்கு முயற்சி செய்யலாம்.

மகரம்

குரு பார்வையால் திருமண வாய்ப்புகள் கைக்கூடும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

பூர்வீக சொத்துக்களினால் வருமானம் கிடைக்கும். செய்யும் முயற்சிகள் வெற்றியாக அமையும். இந்த குருப்பெயர்ச்சி மகரம் ராசிக்காரர்களுக்கு நன்மை தரக்கூடியதாக உள்ளது.

கும்பம்

குடும்பம் குதூகலமாக இருக்கும். உற்சாகமாக குடும்பத்தினருடன் நேரத்தை செலவு செய்வீர்கள். வருமானம் அதிகரிக்கும்.

புது வீடு, இடம், வாகனம் வாங்குவீர்கள். நோய்கள், கடன்கள் தீரும் காலமாகும். எதிரிகள் தொல்லை நீங்கும். எண்ணங்கள் நிறைவேறும் காலம்.

மீனம்

கடந்த சில ஆண்டுகாலமாகவே சிரமத்தை சந்தித்து வரும் மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி நன்மை தரக்கூடியதாக அமைந்துள்ளது.

திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் நிகழும், முயற்சிகள் வெற்றியடையும், புத்திர பாக்கியம் கிடைக்கும். சொத்துக்களினால் வருமானம் உண்டு. பிள்ளைகளினால் நன்மைகள் நடைபெறும்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net