இலங்கைக்கு வந்த பிரித்தானியர் பரிதாபமாக மரணம்!

இலங்கைக்கு வந்த பிரித்தானியர் பரிதாபமாக மரணம்!

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.

பெந்தோட்ட கடலில் குளித்துக் கொண்டிருந்த நிலையில் குறித்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 49 வயதான பிரித்தானிய நாட்டவர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளது.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Copyright © 5701 Mukadu · All rights reserved · designed by Speed IT net