முதல் வெற்றியை பதிவு செய்யுமா இலங்கை?

முதல் வெற்றியை பதிவு செய்யுமா இலங்கை? இங்கிலாந்துடன் இன்று மோதல்!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது.

தம்புள்ளை ரன்கிரி மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், இலங்கை அணிக்கு தினேஷ் சந்திமாலும், இங்கிலாந்து அணிக்கு இயான் மோர்கனும் தலைமை தாங்குகின்றனர்.

இப்போட்டியை பொறுத்தவரை இங்கிலாந்து அணியை விட இலங்கை அணி, வலு குறைந்த அணியாகவே காணப்பட்டாலும், இலங்கை அணியை சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது சுலபமான காரியமல்ல.

ஆகையால், இப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு இலங்கை அணி, கடும் நெருக்கடி என பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி, மழைக்காரணமாக இடைநிறுத்தப்பட்டது. இந்நிலையில் இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது போட்டி, இன்று நடைபெறுகின்றது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net