இசைத்துறையின் முதலாவது பேராசிரியை காலமானார்!

இசைத்துறையின் முதலாவது பேராசிரியை காலமானார்!

சிங்கள திரையுலகின் பிரபல பாடகி பேராசிரியை அமரா ரணதுங்க காலமானார்.

இவர் நேற்று(திங்கட்கிழமை) இரவு காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சில தினங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையியே அவர் தனது 79 வயதில் காலமானார்.

இவர் பிரபல பாடகர் தயாரத்ன ரணதுங்கவின் மனைவி என்பதுடன் இலங்கை இசைத்துறையின் முதலாவது பேராசிரியையும் ஆவார்.

அவருடைய இறுதிக்கிரியைகள் எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Copyright © 3962 Mukadu · All rights reserved · designed by Speed IT net