ஐரோப்பாவில் திடீரென காணாமல் போன இலங்கையர்!

ஐரோப்பாவில் திடீரென காணாமல் போன இலங்கையர்! தீவிர தேடுதலில் பொலிஸார்!

ஸ்கொட்லாந்தில் இலங்கையர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஸ்கொட்லாந்தில் மீன்பிடி தொழில் ஈடுபட்ட 40 வயதான இலங்கையர் ஒருவரே காணாமல் போயுள்ளார்.

அவர் காணாமல் போயுள்ளமை தொடர்பில் அந்த நாட்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மின்னத்த பட்டபெதிகே என்ற இலங்கையர் தொடர்பில் இறுதியாக கடந்த வெள்ளிக்கிழமையே செய்தி பதிவாகியுள்ளது.

அதன் பின்னர் இதுவரையில் அவர் தொடர்பில் தகவல் இல்லை என ஸ்கொட்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இலங்கையர் காணாமல் போனமை தொடர்பில் அந்த நாட்டு பொலிஸார் பேஸ்புக் ஊடாக விளம்பரம் ஒன்றை பதிவிட்டுள்ளனர்.

Copyright © 3362 Mukadu · All rights reserved · designed by Speed IT net