மட்டக்களப்பில் பாதுகாப்பு உத்தியோகத்தர் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பில் பாதுகாப்பு உத்தியோகத்தர் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு , களுவாஞ்சிகுடி நகரில் உள்ள தனியார் வங்கியொன்றின் இரவு நேர பாதுகாப்பு உத்தியோகத்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த வங்கியில் நேற்றிரவு பாதுகாப்பு கடமையில் இருந்தவரே இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் குருக்கள்மடம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சோ.சுகுமாரன் எனும் 50வயதுடைய நபர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் இது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்ததுடன், பிரதேச மரண விசாரணை அதிகாரி கே.கணேசதாஸ் மரண விசாரணைகளை மேற்கொண்டதை தொடர்ந்து பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

குறித்த நபரின் மரணம் எவ்வாறு நடைபெற்றது என்பது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net