இலங்கை – இங்கிலாந்து மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டி இன்று!

இலங்கை – இங்கிலாந்து மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டி இன்று!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

கண்டி பல்லேகல இந்த போட்டி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

முன்னதாக இடம்பெற்ற இரு போட்டிகளில் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், 2வது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருந்தது.

இதேவேளை, இன்றைய போட்டியில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரரான குசல் ஜனித் பெரேரா விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

குசல் ஜனித் பெரேரா பயிற்சிகளின்போது உபாதைக்குள்ளாகியுள்ளார். எனினும், இந்த விடயம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இதுவரை எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை.

குசல் ஜனித் பெரேரா இன்றைய போட்டியில் விளையாடாத பட்சத்தில், அவருக்குப் பதிலாக சதீர சரவிக்ரம இலங்கை அணியில் இணைத்துக் கொள்ளப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net