ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்ட பெண் விளக்கமறியலில்!

ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்ட பெண் விளக்கமறியலில்!

மட்டக்குளி பகுதியில் வைத்து ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்ட பெண்ணை எதிர்வரும் 31 ஆம் திதகி வரை விளக்கமறியலில் வைக்க மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது.

மட்டக்குளி கதிரானவத்தையைச் சேர்ந்த முத்துசாமி வசந்தி என்ற 41 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளார்.

மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கதிரானவத்த பகுதியில் வைத்து திங்கட்கிழமை இரவு 9 மணிக்கு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த பெண் 11 கிராம் 150 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவரை மேலதிக விசாரணைகளுக்காக மட்டக்குளி பொலிஸில் ஒப்படைக்கப்பட்டதையடுத்து இன்றைய தினம் இவர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போதே நீதிபதி இவரை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net