கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீகொடுவத்தை பகுதியில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றிரவு 8.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இரு நபர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தார்க்கம் கைகலப்பாக மாறியமையினாலேயே மேற்படி சம்பவம் சம்பவித்துள்ளது.

கைகலப்பில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட பலப்பிட்டிய, சிறிசேன மாவத்தையை சேர்ந்த 29 வயதுடையவர் படுகாயமடைந்த நிலையில் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடையவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகைளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net