பிர­பா­க­ரனின் புகைப்­ப­டத்­துக்கு ‘லைக்’ செய்த இளைஞன் பிணையில் விடு­தலை!

பிர­பா­க­ரனின் புகைப்­ப­டத்­துக்கு ‘லைக்’ செய்த இளைஞன் பிணையில் விடு­தலை!

விடு­தலைப் புலி­களின் தலைவர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரனின் படத்­துடன் முகப்­புத்­த­கத்தில் பதி­வி­டப்­பட்ட வாழ்த்துச் செய்­தியை லைக் செய்து பகிர்வு செய்த குற்­றச்­சாட்டில் கைதான தமிழ் இளைஞன் ஒருவர் 10 மாதங்­க­ளுக்குப் பின் பிணையில் விடு­தலை செய்­யப்­பட்­டுள்ளார்.

குறித்த இளை­ஞனை பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி சம்பா ஜானகி ராஜ­ரத்ன நேற்று அனு­ம­தி­ய­ளித்­துள்ளார்.

பிர­பா­க­ரனின் புகைப்­ப­டத்தை பயன்­ப­டுத்­திய குற்­றச்­சாட்­டுக்­காக இரத்­தி­ன­பு­ரியைச் சேர்ந்த இரு இளை­ஞர்­களை பயங்­க­ர­வாதத் தடுப்புப் பிரி­வினர் கைது­செய்து, சிறையில் அடைத்­தி­ருந்­தனர்.

தினேஷ் குமார் என்ற இளை­ஞனே பிர­பா­க­ரனின் புகைப்­ப­டத்­துடன் வாழ்த்துச் செய்­தியை பதி­விட்­டுள்­ள­தா­கவும் அதை “லைக்” செய்த குற்­றத்­துக்­காக விதுஷன் என்ற இளைஞன் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார்.

இதில் குறித்த பதிவை “லைக்” செய்­த­மைக்­காக கைது செய்­யப்­பட்­டி­ருந்த விது­ஷனுக்கு பிணை வழங்க வேண்­டு­மெனக் கோரி தாக்கல் செய்த மீளாய்வு மனு நேற்று விசா­ர­ணைக்கு வந்த போது, அவரை பிணையில் செல்ல நீதி­பதி அனு­ம­தித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net