இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைமை நிதி அதிகாரி கைது!

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைமை நிதி அதிகாரி கைது!

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைமை நிதி அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபையில் இடம்பெறவிருந்ததாக கூறப்படும் பாரிய நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் அவர் (திங்கட்கிழமை) இரவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற போட்டித் தொடருக்கான ஒளிபரப்பு உரிமத்தை பெற்றுக்கொள்வது தொடர்பில் சுமார் 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடி செய்ய முற்பட்டார் என அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்தநிலையிலேயே அவர் திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Copyright © 3110 Mukadu · All rights reserved · designed by Speed IT net