#MeToo விவகாரம்: ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டர் பக்கத்தின் பதிவு!

#MeToo விவகாரம்: ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டர் பக்கத்தின் பதிவு!

#MeToo விவகாரத்தின் ஊடாக தற்போது பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணமே உள்ளது. இதில் திரையுலகம் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மீதும் அடிக்கடி பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றது.

இந்த நிலையில் #MeToo விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், குற்றம்சாட்டப்பட்டவர்களின் பெயர்களை கேட்கும் போது அதிர்ச்சி அளிக்கின்றது என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது டுவிட்டர் பக்கத்தில் தொரிவித்துள்ளார்.

மேலும் #MeToo விவகாரம் குறித்து ஏ.ஆர்.ரகுமான் தனது டுவிட்டர் பக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குரல் ஓங்கி ஒலிக்க சமூக வலைதளங்கள் பெரும் சுதந்திரத்தை கொடுத்துள்ளன. சினிமாத்துறை பெண்களை மதிக்கும் துறையாக இருக்க விரும்புகின்றேன்.

பாதிக்கப்பட்டவர்கள், குற்றம்சாட்டப்பட்டவர்களின் பெயர்களை கேட்கும் போது அதிர்ச்சி அளிக்கின்றது என்று ஏ.ஆர்.ரகுமான் ‘மீ டூ’ விவகாரம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவருடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net