ரணில் இந்த நாட்டின் பிரதமர் – ஐ.தே.க திட்டவட்டம்!

ரணில் விக்ரமசிங்கவே இந்த நாட்டின் பிரதமர் – ஐ.தே.க திட்டவட்டம்!

ரணில் விக்ரமசிங்கவே இந்த நாட்டின் பிரதமர் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சற்று முன்னர் பிரதமராக பதவி செய்து கொண்டிருந்தார்.

மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டது அரசியல் அமைப்பிற்கு முரணானது என பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

நாட்டின் அரசியல் அமைப்பின் அடிப்படையில் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்க முடியாது எனவும் எனவே அவரே நாட்டின் பிரதமர் எனவும் அஜித் பெரேரா ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net