ஐ.தே.க. ஆதரவாளர்கள் அலரி மாளிகைக்கு முன் ஆர்ப்பாட்டம்!

ஐ.தே.க. ஆதரவாளர்கள் அலரி மாளிகைக்கு முன் ஆர்ப்பாட்டம்!

நாட்டின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அலரி மாளிகைக்கு முன்பாக ஐ.தே.க. ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

கொழும்பின் பல பகுதிகளிலுமிருந்து அலரி மாளிகை வளாகத்திற்கு இன்று (சனிக்கிழமை) காலை சென்ற ஆதரவாளர்கள் அங்கு ரணிலுக்கு ஆதரவாகவும் மஹிந்தவுக்கு எதிராகவும் கோஷமெழுப்பி வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

அத்தோடு, ஆதரவாளர்களில் ஒரு பகுதியினர் அலரி மாளிகைக்குள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார். தற்போது பேருந்துகளில் ஏராளமான ஐ.தே.க. ஆதரவாளர்கள் அலரி மாளிகையை நோக்கி வந்துகொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கையின் பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு சத்தியப்பிரமாணம் செய்துள்ள நிலையில், அது அரசியலமைப்பிற்கு முரணானதென ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அவர் அலரி மாளிகையிலிருந்து வெளியேற வேண்டுமென மஹிந்த அணியினர் குறிப்பிட்டுள்ளதோடு, அவ்வாறு வெளியேறாவிட்டால் அலரி மாளிகையை சுற்றிவளைப்போம் என குறிப்பிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்தே அலரி மாளிகைக்கு முன்பாக ஐ.தே.க. ஆதரவாளர்கள் கூடியுள்ளனர்.

Copyright © 7432 Mukadu · All rights reserved · designed by Speed IT net