அரசியல் கைதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!

அரசியல் கைதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!

இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச அண்மையில் பொறுப்பேற்றுள்ள நிலையில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நாளைய தினம் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நீண்ட காலம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விவகாரம் குறித்து காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இது குறித்த நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

அரசியல் கைதிகள் விவகாரம் குறித்து விசேட ஆவணம் ஒன்று தயார் செய்து சட்ட வல்லுனர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

இதனையடுத்து அரசியல் கைதிகள் விவகாரம் குறுகிய காலத்தில் திடமான தீர்மானம் ஒன்றை மேற்கொண்டு துரித விடுதலை தொடா்பில் நடவடிக்கை எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச எமது செய்தி சேவைக்கு குறிப்பிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net