அரசாங்கத்தின் எந்தவொரு பதவியையும் வகிக்கப் போவதில்லை!

அரசாங்கத்தின் எந்தவொரு பதவியையும் வகிக்கப் போவதில்லை!

தற்போதைய அரசாங்கத்தில் எந்தவொரு பதவியையும் வகிக்கப் போவதில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த விசேட நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தில் சில பதவிகளை வகிக்கப் போவதாக ஊடகங்களில் வெளியாகி வரும் செய்திகளில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஊடக செய்திகளை முற்று முழுதாக நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தற்போதைய அரசாங்கத்தில் எந்தவொரு பதவியையும் வகிக்கப் போவதில்லை என கோத்தபாய ராஜபக்ச திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

அநேக ஊடகங்களில் கோத்தபாய பாதுகாப்புச் செயலாளராக பதவி ஏற்றுக்கொள்ள உள்ளதாக செய்தி வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 5574 Mukadu · All rights reserved · designed by Speed IT net