சீன நிலக்கரி சுரங்கத்தில் உயிரிழந்தவர்கள் தொகை 21 ஆக அதிகரிப்பு!

சீன நிலக்கரி சுரங்கத்தில் உயிரிழந்தவர்கள் தொகை 21 ஆக அதிகரிப்பு!

சீன நிலக்கரிச் சுரங்க வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் தொகை 21 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 10 நாட்களுக்கு முன்னர், சீனாவின் யுங்செங் மாகாணத்திலுள்ள நிலக்கரிச் சுரங்கத்திற்குள் அமைந்திருந்த கழிவுநீர்க் குழாய் வெடிப்புக்கு உட்பட்டு பாறைகள் வெடித்துள்ளன.

குறித்த விபத்தில் சுரங்க பணியாளர்கள் 2 பேர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன் 20 பேர் சுரங்கத்துள் சிக்குண்டுள்ளனர்.

அடுத்த நாள் தொடர்ச்சியாக இடம்பெற்ற மீட்புப்பணியில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டதோடு ஏனைய 9 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், வைத்தியசாலையில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்ட காயமடைந்தவர்கள் அனைவரும் உயிரிழந்துள்ளதாக நேற்று (திங்கட்கிழமை) சீன அதிகாரிகள் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net