அமைச்சர்களாக மேலும் சிலர் பதவியேற்பு
இலங்கையின் ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய, 2018 ஒக்டோபர் 26 ஆம் திகதி அமைச்சரவை கலைக்கப்பட்ட நிலையில் தற்போது மிகுதி அமைச்சர்களுக்கான நியமனம் வழங்கப்பட்டு வருகின்றது.
- விவசாயம் பிரதி அமைச்சர் -அங்கஜன் இராமநாதன்
- மாகாண சபை, உள்ளூராட்சி, மற்றும் விளையாட்டுதுறை இராஜாங்க அமைச்சர் – ஸ்ரீயானி விஜயவிக்ரம
- கல்வி மற்றும் உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் – மோகன் லால் கிரேரோ
- நெடுஞ்சாலைகள் மற்றும் சாலை மேம்பாடு இராஜாங்க அமைச்சராக – M. L. A. M.ஹிஸ்புல்லா
- பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் – லக்ஷ்மன் செனவிரட்ன
- இளைஞர், மகளிர் மற்றும் குழந்தைகள் விவகார இராஜாங்க அமைச்சர் – பியசேன கமகே
- திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சித் துறை அமைச்சர் – தயாசிறி ஜயசேகர
- துமிந்த திஸாநாயக்கவிற்கு மீண்டும் நீர்ப்பாசன, நீர் வளங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் அலுவல்கள் அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.