ஆட்சி மாற்றம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்டார் நாமல்!

ஆட்சி மாற்றம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்டார் நாமல்!

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து அகற்றுவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் நான்கைந்து மாதங்கள் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்

இந்தியாவின் என்டிடீவிக்கு அளி;த்துள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி சிறிசேன தன்னை கொல்வதற்கான சதி முயற்சி குறித்து தெரியவந்த பின்னரே ஆட்சி மாற்றம் குறித்து தீர்மானித்ததாக தெரிவித்துள்ள நிலையில் நாமல் ராஜபக்ச அதற்கு முரணாக கருத்து வெளியிட்டுள்ளார்.

எனது தந்தை ஜனாதிபதியின் விருப்பம் மற்றும் அழைப்பின்பேரிலேயே பிரதமராக பதவியேற்றார் என தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ச இரு தலைவர்களும் பல மாதங்களாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்தனர் எனவும் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தை ஸ்திரமாக்குவதற்கும் பொருளாதார அரசியல் சமூக ஸ்திரதன்மையை கொண்டுவருவதற்கும் என்ன நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பது குறித்து கடந்த பல மாதங்களாக இரு தலைவர்களும் ஆராய்ந்து வந்தனர் எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாங்கள் அறிந்தவரை இ;ந்த பேச்சுவார்த்தைகள் கடந்த நான்கைந்து மாதங்களாகவே இடம்பெற்றுவந்துள்ளன, அவர்கள் பழைய சகாக்கள் என்ற அடிப்படையில் 2015 ஆட்சி மாற்றத்தின் பின்னரும் தொடர்பிலிருந்தனர் எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியை கொலை செய்வதற்கான சதி குறித்து முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு பாரதூரமானது என தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ச ஆனால் இதற்காக மாத்திரம் சிறிசேன ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தவில்லை வேறு பல விடயங்களும் ஆட்சி மாற்றத்திற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

சிறிசேனவும் ரணி;ல் விக்கிரமசிங்கவும் இணைந்து பணியாற்றுவதற்காக மேற்கொண்ட முயற்சிகள் ஆரம்பத்திலிருந்து வெற்றியளிக்கவில்லை என நாமல்ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முதல் நாளிலிருந்தே இந்த கூட்டணி வெற்றிபெறாது என்பது எங்களிற்கு தெரியும்,இருவரும் வெவ்வேறு பின்னணியிலிருந்து வந்தவர்கள்,அவர்கள் இருவரும் வெவ்வேறு அரசியல் கொள்கைகளை கொண்டவர்கள், அவர்களின் பொருளாதார சமூக அரசியல் கொள்கைகளிற்கு இடையில் பாரிய வித்தியாசம் உள்ளது எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஆகவே இந்த விடயங்கள் ஒருபோதும் இணையாது,ஆனால் துரதிஸ்டவசமாக அவ்வேளை எனது தந்தையை தோற்கடிப்பதற்கான வாய்ப்பாக அவர்கள் இதனை கருதினார்கள் இந்த கூட்டணியின் முழு நோக்கமும் தேர்தலே இவர்களிடம் நாட்டை ஆள்வதற்கான திட்டமிருக்கவில்லை எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தற்போது இடம்பெற்றுள்ள மாற்றங்களால் இந்தியா கவலையடையவேண்டிய அவசியமில்லை எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எனது தந்தையோ அல்லது அவரது அரசாங்கமோ எடுத்த எந்த முடிவின் பின்னாலும் சீனா அரசாங்கமோ அல்லது வெளிநாடொன்றின் செல்வாக்கோயில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் இந்தியா இலங்கைக்கு இடையில் அவ்வாறான புரிந்துணர்வின்மை காணப்பட்டது எங்களிற்கு தெரியும் இந்தியா கவலையடையவேண்டியதில்லை,இலங்கையின் அபிவிருத்தியில் இந்தியா பங்காளியாக விளங்கும் எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் போது இந்தியா எனது தந்தைக்கு நெருக்கமாக விளங்கியது,இந்தியா பயங்கரவாதத்தை தோற்கடிக்க உதவியது நாங்கள் இந்தியாவின் யுத்தத்தையே முன்னெடுத்தோம் எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஆட்சி மாற்றம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்டார் நாமல்!

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து அகற்றுவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் நான்கைந்து மாதங்கள் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்

இந்தியாவின் என்டிடீவிக்கு அளி;த்துள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி சிறிசேன தன்னை கொல்வதற்கான சதி முயற்சி குறித்து தெரியவந்த பின்னரே ஆட்சி மாற்றம் குறித்து தீர்மானித்ததாக தெரிவித்துள்ள நிலையில் நாமல் ராஜபக்ச அதற்கு முரணாக கருத்து வெளியிட்டுள்ளார்.

எனது தந்தை ஜனாதிபதியின் விருப்பம் மற்றும் அழைப்பின்பேரிலேயே பிரதமராக பதவியேற்றார் என தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ச இரு தலைவர்களும் பல மாதங்களாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்தனர் எனவும் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தை ஸ்திரமாக்குவதற்கும் பொருளாதார அரசியல் சமூக ஸ்திரதன்மையை கொண்டுவருவதற்கும் என்ன நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பது குறித்து கடந்த பல மாதங்களாக இரு தலைவர்களும் ஆராய்ந்து வந்தனர் எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாங்கள் அறிந்தவரை இ;ந்த பேச்சுவார்த்தைகள் கடந்த நான்கைந்து மாதங்களாகவே இடம்பெற்றுவந்துள்ளன, அவர்கள் பழைய சகாக்கள் என்ற அடிப்படையில் 2015 ஆட்சி மாற்றத்தின் பின்னரும் தொடர்பிலிருந்தனர் எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியை கொலை செய்வதற்கான சதி குறித்து முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு பாரதூரமானது என தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ச ஆனால் இதற்காக மாத்திரம் சிறிசேன ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தவில்லை வேறு பல விடயங்களும் ஆட்சி மாற்றத்திற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

சிறிசேனவும் ரணி;ல் விக்கிரமசிங்கவும் இணைந்து பணியாற்றுவதற்காக மேற்கொண்ட முயற்சிகள் ஆரம்பத்திலிருந்து வெற்றியளிக்கவில்லை என நாமல்ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முதல் நாளிலிருந்தே இந்த கூட்டணி வெற்றிபெறாது என்பது எங்களிற்கு தெரியும்,இருவரும் வெவ்வேறு பின்னணியிலிருந்து வந்தவர்கள்,அவர்கள் இருவரும் வெவ்வேறு அரசியல் கொள்கைகளை கொண்டவர்கள், அவர்களின் பொருளாதார சமூக அரசியல் கொள்கைகளிற்கு இடையில் பாரிய வித்தியாசம் உள்ளது எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஆகவே இந்த விடயங்கள் ஒருபோதும் இணையாது,ஆனால் துரதிஸ்டவசமாக அவ்வேளை எனது தந்தையை தோற்கடிப்பதற்கான வாய்ப்பாக அவர்கள் இதனை கருதினார்கள் இந்த கூட்டணியின் முழு நோக்கமும் தேர்தலே இவர்களிடம் நாட்டை ஆள்வதற்கான திட்டமிருக்கவில்லை எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தற்போது இடம்பெற்றுள்ள மாற்றங்களால் இந்தியா கவலையடையவேண்டிய அவசியமில்லை எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எனது தந்தையோ அல்லது அவரது அரசாங்கமோ எடுத்த எந்த முடிவின் பின்னாலும் சீனா அரசாங்கமோ அல்லது வெளிநாடொன்றின் செல்வாக்கோயில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் இந்தியா இலங்கைக்கு இடையில் அவ்வாறான புரிந்துணர்வின்மை காணப்பட்டது எங்களிற்கு தெரியும் இந்தியா கவலையடையவேண்டியதில்லை,இலங்கையின் அபிவிருத்தியில் இந்தியா பங்காளியாக விளங்கும் எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் போது இந்தியா எனது தந்தைக்கு நெருக்கமாக விளங்கியது,இந்தியா பயங்கரவாதத்தை தோற்கடிக்க உதவியது நாங்கள் இந்தியாவின் யுத்தத்தையே முன்னெடுத்தோம் எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net