அமைச்சர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் மகிந்த!
பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கும் புதிய அமைச்சரவை அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்று வருகிறது.
பிரதமரின் செயலகத்தில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் அடுத்தக் கட்ட நகர்வுகள் குறித்து இந்த பேச்சுவார்த்தையில் விரிவாக கலந்துரையாடப்படுவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.