புதிய பிரதமருக்கு ஆதரவில்லை!

புதிய பிரதமருக்கு ஆதரவில்லை!

நாட்டின் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்க முடியாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) தலைவருமான த.சித்தார்த்தன் தெரிவித்தார்.

வவுனியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் மத்தியகுழு கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பிரதமர் மாற்றமானது அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சைகளையும் குழப்பங்களையும் உருவாக்கியுள்ளதென குறிப்பிட்டுள்ள சித்தார்த்தன், அரசியலமைப்புக்கு விரோதமான ஒரு செயற்பாடாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு இதனை பார்ப்பதாக சுட்டிக்காட்டினார்.

ஆகையால் புதிய பிரதமரை ஆதரிக்க போவதில்லை என்ற தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்ட வியாழேந்திரனை புளொட் அமைப்பிலிருந்து நீக்கியுள்ள நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்தும் அவரை விலக்குவதற்கு பரிந்துரை செய்துள்ளதாக சித்தார்த்தன் மேலும் குறிப்பிட்டார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net