நாடாளுமன்றத்தில் 113 பெரும்பான்மை எவருக்கும் இல்லை!

நாடாளுமன்றத்தில் 113 பெரும்பான்மை எவருக்கும் இல்லை!

நாடாளுமன்றத்தில் 113 பேர் என்ற பெரும்பான்மை எவருக்கும் கிடையாது என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் புதிய அரசாங்கம் வரும்வரை தாமே அரசாங்கம் என்றும், பிரதமராக தொடர்ந்தும் மஹிந்த ராஜபக்ஷவே செயற்படுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் கூட்டப்படுவதற்கு முன்னர் இடம்பெறும் கட்சி தலைவர்கள் கூட்டத்தில், நாடாளுமன்றில் முன்னெடுக்கப்படும் விடயங்கள் குறித்து தீர்மானிக்கப்படும்.

எனினும், இன்றைய கூட்டத்தில் கலந்துரையாடாமல் பிரேரணையை கொண்டுவந்தது பிழையான விடயமென குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படாமல், நாடாளுமன்ற நிலையியல் கட்டளையை மீறியே பிரேரணையை கொண்டுவந்தனர் என்றும், 122 பேரின் கையொப்பங்களும் திருட்டுத்தனமாகவே பெறப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், சபாநாயகரின் கடிதம் கிடைத்தவுடன் அரசியலமைப்பிற்கமைய ஜனாதிபதி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வாரென அமைச்சரவை பேச்சாளர் மஹிந்த சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © 4057 Mukadu · All rights reserved · designed by Speed IT net