சிம்பாப்வேயில் பயணித்துக்கொண்டிருந்த பேருந்தில் திடீர் தீ விபத்து! 42 பேர் பலி!

சிம்பாப்வேயில் பயணித்துக்கொண்டிருந்த பேருந்தில் திடீர் தீ விபத்து! 42 பேர் பலி!

சிம்பாப்வேயின் மிட்லான்ட்ஸ் மாகாணத்தில் பேருந்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

அந்த நாட்டின் மிட்லான்ட்ஸ் மாகாணத்திற்குட்பட்ட ஸ்விஷாவானே பகுதியில் இருந்து தென்னாப்பிரிக்காவில் உள்ள முசினா என்ற பகுதியை நோக்கி நேற்று (வியாழக்கிழமை) 70 பேருடன் சென்ற பேருந்தே விபத்துக்குள்ளாகியுள்ளது.

புலாவயோ- பெய்ட்பிரிட்ஜ் சாலை வழியாக நேற்றிரவு சென்றபோது அந்த பேருந்து திடீரென்று தீபிடித்து எரிந்தது.

ஓடும் பேருந்தில் ஏற்பட்ட இந்த விபத்தில் சிக்கிய 42 பேர் உயிரிழந்தனர் மேலும் 20ற்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர்.

படுகாயமடைந்த 20 பெரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதே மாகாணத்தில் உள்ள ருசாப்பே என்னுமிடத்தில் கடந்த வாரம் இரு பேருந்துகள் மோதிகொண்ட விபத்தில் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © 4661 Mukadu · All rights reserved · designed by Speed IT net